கருப்பட்டி பணியாரம்

தேவையானவை :
இட்லி மாவு - 1 கிண்ணம்
கருப்பட்டி - அரை கிண்ணம்
ரவை - 1 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் - 1
தேங்காய்ப்பூ - 1 டீஸ்பூன்
செய்முறை:
1.இட்லி மாவில் உப்பு குறைவாக சேர்த்து எடுத்து கொள்ள வேண்டும்
2.ஒரு கனமான பாத்திரத்தில் வெல்லத்தைத் தூளாக்கி போட்டு அதில் சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்துக் கரையவிடவேண்டும்.தீ மிதமாக இருக்கட்டும்.அதிகமானால் பாகு கருக வாய்ப்புண்டு.வெல்லம் கரைந்ததும் நீரை வடிகட்டி அதை ஆரவைக்கவேண்டும் .
3.வெறும் வாணலியில் ரவையை சூடு வர வறுத்து ஆறியதும் மாவில் கொட்டிக் கலந்து வைக்கவேண்டும்.மேலும் வெல்ல நீர்,ஏலக்காய்,தேங்காய்ப்பூ எல்லாவற்றையும் சேர்த்துக் கலக்க வேண்டும்
4.ஒரு 1/2 மணி நேரம் கழித்து குழி பணியார சட்டியை அடுப்பில் வைத்து சூடுபடுத்தவேண்டும்.
5.சட்டி சூடாகியதும் ஒவ்வொரு குழியிலும் சிறிது நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு குழியின் முக்கால் பாகம் அளவிற்கு மாவை ஊற்றி,மூடி வேக வைத்தால் சுவையான கருப்படி பணியாரம் கிடைக்கும்.
6.தீ மிதமாக இருக்கட்டும்.அதிகமானால் மேல் பாகம் தீய்ந்தும் உள்ளே வேகாமலும் இருக்கும்.
Comments
Post a Comment